சங்ககிரி: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி, வட்ராம்பாளையம் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டினர்.
அதிமுகவை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50-வது ஆண்டு அக்டோபர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதையொட்டி சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி, வட்ராம்பாளையம் கிராமத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவரும், அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணியின் மாவட்டச் செயலருமான ஏ.பி.சிவக்குமாரன் தலைமையில் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தலைமையில் நிர்வாகிகள் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். நிர்வாகிகள் பழனிசாமி, நடேசன், மணி, கண்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.