தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்கள் 2021 மற்றும் 28 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்களில் போட்டிமிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலலிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கின் உண்மை நகலினை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாள்களுக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்ட ஊராட்சி செயலரிடமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட
வேட்பாளர்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்ரு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) / ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கஞும் தேர்தல் செலவு கணக்கு விவரத்தினை உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் செலவு
கணக்குத் தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை தொடர்புடைய அலுவலரிடமிருந்து, வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994, பிரிவு 37(4)ன்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வருங்காலங்களில் முன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.