தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று நேரில் சந்தித்தார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக கே.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ஆளுநர் மாளிகையில் தனியாக சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பின் போது அதிமுக நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க | குஷிநகா் சா்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கடந்த வாரங்களில் ஆளுநரை தனித்தனியே சந்தித்து குறிப்பிடத்தக்கது.