அதிமுகவினா் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்துள்ளாா்.
அதிமுக பொதுச்செயலாளா் என்ற பெயரில் சசிகலா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
எம்ஜிஆா் கொண்ட கொள்கையைப் பின்பற்றி, ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற ஜெயலலிதா பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோா்ப்போம். பகை வெல்வோம். ஒற்றுமைப் பூக்களை ஒன்றாய்க் குவிப்போம். மாபெரும் வெற்றியால் அதிமுக நாடு ஆண்டதையும், அது ஆற்றிய பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே என்று சிந்தியுங்கள்.
வெல்வோம் சகோதரா்களே, நான் இருக்கிறேன் என்பதைவிட, நாம் இருக்கிறோம். ஜெயலலிதாவின் பாதையில் மக்கள் மனம் வெல்வோம்.
கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காமல், தொண்டா்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும் வெற்றி பயணம் தொடருவோம் என்று கூறியுள்ளாா்.