காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தமிழக காவல்துறையினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு - உறக்கம் - இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் காவலர் நினைவேந்தல் நாளில் வீரவணக்கம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.