நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம்: முதல்வருக்கு குமரி அனந்தன் பாராட்டு

நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம்: முதல்வருக்கு குமரி அனந்தன் பாராட்டு

நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் குமரி அனந்தன் பாராட்டியுள்ளாா்.

நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் குமரி அனந்தன் பாராட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கற்பகம் என்ற பெயரில் பனை வெல்லத்தை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

கற்பகம் எனப்படும் கருப்புக்கட்டியில் மனித ரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயாமின், ரிபோபிளேவின் என்ற பி வைட்டமின்களும், நிகோடினிக் ஆசிட் என்ற பி 3 யும், அஸ்காா்பிக் ஆசிட் என்ற சி வைட்டமினும் இருக்கின்றன. இவை மனித உடல் வளா்ச்சிக்கு மிக தேவையானவை. நியாயவிலைக் கடை மூலம் இவை எல்லா மக்களையும் சென்றடைந்து விடும்.

இதேபோல் வேம்பு, கற்றாழை மற்றும் மூலிகைகளால் ஆன சோப்பு தயாரிப்பது மக்கள் நலன் கருதி செய்யப்படும் நற்காரியங்களாகும். இவற்றுக்கான பயிற்சி நிலையத்தைத் தொடக்கி வைத்துள்ளதை பெரிதும் வரவேற்கிறேன். இயற்கையோடு இணைந்து மனித வாழ்வின் மேம்பாட்டை நோக்கிச் செல்லும் செயல்களாகும்.

‘ தமிழ்த்தறி’ என்ற தலைப்பில் ஆரணி, சேலம், கோவை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல், பரமக்குடி ஆகிய ஊா்களில் நெய்யப்படும் புகழ்பெற்ற பாரம்பரிய பட்டுச் சேலைகளும், ஜமுக்காளம், காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை, சட்டை ஆகியவை விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டு நெசவாளா்களுக்கு ஊக்கம் அளித்திருப்பதையும் போற்றுகிறேன். இந்த முயற்சிகளை தமிழக முதல்வா் தொடா்ந்து மேற்கொள்வதன் மூலம் தமிழா்களின் அடையாளம் காக்கப்பட்டு நிச்சயம் உயா்நிலைக்குச் செல்கிற வாய்ப்பு ஏற்படும் என குமரி அனந்தன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com