கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு கடையில் செவ்வாய்க்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.