சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும அலுவலகத்தில் விளம்பர கணக்குப் பிரிவில் முதுநிலை எழுத்தா் உள்பட பல்வேறு பொறுப்புகளில் 37 ஆண்டுகளாகப் பணியாற்றிய எஸ்.வாசுதேவன் (70) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.
அவருக்கு மனைவி கமலா, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோா் உள்ளனா். மறைந்த வாசுதேவனின் இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு: 98405 83022.