தமிழகத்தில் புதிதாக 1,075 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்புகள் குறித்த தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தில் 1,21,115 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் புதிதாக 1,075 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,98,493 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,315 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் செய்யும் மாபெரும் தவறு
இதுவரை மொத்தம் 26,50,145 பேர் குணமடைந்துள்ளனர். 36,060 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 12,288 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்: