தமிழ்நாடு
அடுத்த 2 மணிநேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அக்.28 காலை 9.35 மணிக்கு வெளியிட்டிருக்கும் இது குறித்த எச்சரிக்கைத் தகவலை தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, அடுத்த 2 மணிநேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.