புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி புதுவை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், தலா 1,000 ரூபாயும், கட்டடத் தொழிலாளர்களுக்கு தலா 3,000 ரூபாயும், தீபாவளி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதன்மூலம் புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கூப்பன் மூலம் தீபாவளி பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்