வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் மற்றும் 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் பூங்காவில் அக்டோபர் 26ஆம் தேதி 19 வயதான பெண் சிங்கம் உயிரிழந்தது. அந்த சிங்கம் வயது முதிர்வால் உடல்நலம் குன்றி அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று(அக்.27) 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உயிரிழந்த சிங்கம் மற்றும் நெருப்பு கோழிகளின் பிரேத பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும்.