தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மயிலாடுதுறை, நாகை, திருச்சி, நெல்லை, தஞ்சை, தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து, இன்று காலையும் மழை தொடர்வதால் இந்த 7 மாவட்டங்களின் ஆட்சியர்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.