கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க- ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் சிக்கியவர் 96 வயதில் மரணம்
இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து மண்டல அலுவலர்கள் மற்றும் குறு வட்ட அளவிலான குழுக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.