தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவா், தீபாவளியை முன்னிட்டு, வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு முடிந்து, காத்திருப்போா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்காக, 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளன.
இதுதவிர, தாம்பரம்-நாகா்கோவில் சிறப்பு ரயில் (06003-06004), சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூா் சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல்-சந்ரகாச்சி(06036-06035) ரயில் ஆகிய மூன்று சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.