2022, மார்ச் முதல் செயல்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் 

சென்னையை அடுத்த வண்டலூர், கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர், கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

குறிப்பாக பண்டிகை நாள்களுக்கு முன்பு, கடும் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் இருந்தது. இதனைத் தவிர்க்க வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சென்னையை சுற்றியிருக்கும் பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து இயக்க தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டு அதன்படி இயக்கப்படுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காண, ரூ.393 கோடியில் கிளாம்பாக்கத்தில் புதிய வேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2022 மார்ச் முதல் இந்தப் புதிய பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் ரூ.336 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் வரும் 2022, அக்டோபர் முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com