தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணிநேரத்திற்கு நிலகிரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(செப்.3) நீலகிரி, திருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அரபிக் கடல் பகுதிகளில் செப்டம்பர் 6 வரை பலத்த காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.