அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்து லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கோவை குனியமுத்தூரில் உள்ள வங்கியின் லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். லாக்கர் கடைசியாக எப்போது திறக்கட்டது எனவும் வங்கி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
மாநகராட்சிகளில் ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்த முறைகேடு தொடா்பாக, முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கடந்த ஆகஸ்ட் 10ஆம் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.