எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

`பால சாகித்ய புரஸ்கார் விருது’ பெற்றுள்ள எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

`பால சாகித்ய புரஸ்கார் விருது’ பெற்றுள்ள எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழில் சிறந்த சிறார் இலக்கியத்திற்கான `பால சாகித்ய புரஸ்கார் விருது’ பெற்றுள்ள எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

2020ம் ஆண்டுக்கான விருது பாலபாரதி எழுதியுள்ள `மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ எனும் நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் சித்ரவதை தொடர்பாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் விருதுக்கு தகுதியானதாகும்.

தமுஎகச அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட யெஸ்.பாலபாரதி ஊடகவியலாளராகவும் திகழ்ந்து வருகிறார். அவருடைய படைப்புத்திறன் மென்மேலும் வளர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com