இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமின் தருகிறேன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜாமின் கோரிய வழக்கில் தெரிவித்துள்ளார்.
மதுபாட்டிலால் நண்பரை தாக்கிய வழக்கில் ஜாமின் கேட்டு சிவா, கார்த்திக் ஆகிய இரண்டு பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி கூறியது:
இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் இரண்டு பேருக்கும் ஜாமின் தருகிறேன் எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிக்க | அண்ணா பல்கலை.யில் அப்துல் கலாம் சிலை