தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,544 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 19 பேர் பலியாகினர்.
தமிழகத்தில் நேற்று (செப்.6) 1,556 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
கடந்த 4 நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து இருந்த நிலையில், நேற்றும், இன்றும் சற்று குறைந்து வருகிறது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய் கிழமை (செப்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக 1,544 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,25,778-ஆக உயர்ந்துள்ளது.
இன்று பலி எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,055-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து 1,576 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,74,518-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,54,685 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.