கொடநாடு வழக்கு: உதகையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை

கொடநாடு  எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கொடநாடு  எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். 

கொடநாடு  எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தின் மறு புலன் விசாரணை மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் டிஐஜி முத்துசாமி, தனிப்படை விசாரணை அதிகாரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான ஆசிஷ் ராவத், கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். 

உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. 
  
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்ட 8 பேர் கேரளத்தில் உள்ள நிலையில், தனிப்படை போலீசார் கேரளம் விரைந்துள்ளதால் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது.

கொடநாடு  எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் மறு புலன்  விசாரணை ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி முதல் மேற்கு மண்டல ஐஜி சுகாதர் மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் ஜந்து குழுக்கள் அமைக்கப்பட்டு வழக்கின் புலன் விசாரணை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சயன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கார் விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் மற்றும் மனைவி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த  நிலையில் குற்றவாளிகளை கேரளத்து தப்பிச் செல்ல உதவியாக இருந்த ஷாஜி மற்றும் அனீஸ் ஆகியோரிடம் 5 மணி நேரம் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் டிஐஜி முத்துசாமி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத்  ,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை குறித்த ஆலோசனையை நடத்தினர்.

இந்த வழக்கில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற விசாரணை குறித்தும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட மனோஜ் சாமி  , ஜிதின் ஜாய், சந்தோஷ் சாமி, உதயன் , பிஜின்குட்டி ,தீபு ,சதிசன், ஜெம்சீர் அலி ஆகிய 8 பேர் குற்றவாளியாக கருதப்படும் நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது கேரளத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கேரளத்தில் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் உதவி ஆய்வாளர் தலைமையில் நான்கு பேர் விசாரணை நடத்த கேரளம் சென்றுள்ளனர். இந்நிலையில் மற்றொரு குழு சேலம் மாவட்டத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மற்றும் கோவை மாவட்டத்தில் சாயன் சென்ற கார் கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி முக்கிய குற்றவாளியான மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்த நிலையில் மற்றொரு தனிப்படை போலீசார் சேலம் மற்றும் கோவை சென்றுள்ளதாக காவல்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதால் யாரிடமும் விசாரணை நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com