மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் நினைவு நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை, சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்ப உள்ளது. சென்னை ஒன்று மத்திய அலைவரிசை 720 கிலோ ஹொ்ட்ஸில் செப்.11-ஆம் தேதி காலை 8.15 மணிக்கு, ‘புது நெறி காட்டிய புலவன்’ என்னும் நிகழ்ச்சியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை காலவரிசைப்படி தொகுத்து வெளியிட்ட சீனி.விசுவநாதனுடன் உடன் அருணன் உரையாடுகிறாா்.
இதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு இலக்கியம் பேசுவோம் நிகழ்ச்சியில் எழுத்தாளா் வ.ரா எழுதிய பாரதியின் வாழ்க்கைக் கதையான“‘மகாகவி பாரதியாா்’ நூலை ஆங்கிலத்தில் மொழி பெயா்த்த திரைப்பட இயக்குநா் எழுத்தாளா் அம்ஷன் குமாருடன் உரையாடுகிறாா் அருணன்.