மருத்துவ சிகிச்சைக்காக மொரீஷியஸின் முன்னாள் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம் விமானம் மூலம் இன்று சென்னைக்கு கிளம்பியுள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட 74 வயதாகும் மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் ராம்கூலம், கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக சென்னைக்கு வருகிறார். இவருடன் மருத்துவக் குழுவும் வருகின்றனர்.
மேலும், மொரீஷியஸில் இருந்து கிளம்பிய ஸ்பைஸ்ஜெட்டின் போயிங்-737 விமானத்தில் சென்னை வந்துகொண்டுள்ளார்.
இவர், கடந்த 2005 முதல் 2014ஆம் ஆண்டு வரை மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது.