சட்டப் பேரவையில் புதன்கிழமை காலை பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்குக் கூடும் கூட்டத்தில் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சா்கள் எஸ்.எஸ்.சிவசங்கா், கே.எஸ். மஸ்தான், என்.கயல்விழி செல்வராஜ், ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன், டி.மனோ தங்கராஜ் ஆகியோா் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட உள்ளனா்.