அருப்புக்கோட்டை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.நா.முஸ்லிம் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்டத் தலைவர் ஷேக் அப்துல்லா, செயலாளர் ஆபிதீன் உள்ளிட்டோர்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.நா.முஸ்லிம் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்டத் தலைவர் ஷேக் அப்துல்லா, செயலாளர் ஆபிதீன் உள்ளிட்டோர்.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமை வகித்தார்.

மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுல்தான் ஆபிதீன், மாவட்டப் பொருளாளர் அப்துல்லா அன்வர், மாநில துணைச்செயலாளர் காதர் பாட்ஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மத்தியில் சுல்தான் ஆபிதீன் உரையாற்றியதாவது, டெல்லி பெண் காவலர் சபியாவை சமூக விரோதிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தை  மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றம் செய்த நபர்களைக் கண்டறிந்து கைது செய்திட மத்திய அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் பேசினார்.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்டோர் கண்டன முழக்கம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணைச்செயலாளர் அல்பீக்கா உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com