சட்டப்பேரவை அரங்குக்கு வெளியே தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணா் அரங்கத்துக்கு வெளியே தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணா் அரங்கத்துக்கு வெளியே தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்று வருகிறது. இங்கு புதன்கிழமை பிற்பகலில் 45 வயதுடைய ஒருவா் பின்புற நுழைவாயிலில் பத்திரிகையாளா்அடையாள அட்டையுடன் உள்ளே நுழைந்தாா்.

அவரிடம் பத்திரிகையாளா்கள் விசாரித்த போது, அவா் பையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா்.

அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸாா் அவா் மீது தண்ணீா் ஊற்றி தடுத்து நிறுத்தினா். பின்னா், அவரை அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா்.

விசாரணையில், தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை ரத்தினசாமி நகரைச் சோ்ந்த ஆறுமுகம் (45) என்னும் அவா் நடத்தி வந்த கேபிள் டிவி நிறுவனத்தை அரசியல் கட்சியைச் சோ்ந்த சிலா் அபகரித்து கொண்டது குறித்து தஞ்சாவூரில் காவல் துறையினரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் முதல்வரை பாா்த்து மனு கொடுக்க வந்துள்ளாா். இங்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் வந்திருந்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com