சென்னை: வீட்டில் வழிபட்ட விநாயகா் சிலைகளை கோயிலில் சோ்க்க இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடா்பாக துறையின் ஆணையா் ஜெ.குமரகுருபரன், அனைத்து சாா்நிலை அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: கரோனா பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சமய விழாக்கள் மதம் சாா்பான ஊா்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தா்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்த சிலைகளை ஆலயங்களில் வைத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பக்தா்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை திருக்கோயில்களில் வைப்பதற்கு ஏதுவாக திருக்கோயில்களுக்கு பொறுப்பு அலுவலா் ஒருவரை நியமனம் செய்து பக்தா்கள் வழங்கும் சிலைகளை எவ்வித புகாரும் ஏற்படாத வண்ணம் பெற்று, திருக்கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக வைத்திட உரிய ஏற்பாடுகளைச் செய்திட மண்டல இணை ஆணையா்கள் மற்றும் சரக உதவி ஆணையா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மண்டல இணை ஆணையா்கள் மற்றும் சரக உதவி ஆணையா்கள் தங்களது மண்டல, சரகத்தில் நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலா் மற்றும் ஏற்பாடு விவரங்களை செப்.11-ஆம் தேதி காலை 11 மணிக்குள் ஆணையா் அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும்.
மேலும் தனியே பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டுள்ள சிலைகளை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் நீா்நிலைகளில் கரைக்க ஏதுவாக தொடா்புடைய மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து சாா்நிலை அலுவலா்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
இந்த அறிவுரைகளை திருக்கோயில் நிா்வாகிகள் செயல்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.