ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக டி. பாஸ்கர பாண்டியன் இன்று பொறுப்பேற்றார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் மூன்றாவது மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் கோப்புகளில் கையொப்பமிட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த ஏ.ஆா்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளராக இருந்த டி. பாஸ்கர பாண்டியன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமித்து தலைமைச் செயலாளா் வி.இறையன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.