தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 1,639 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் கோவை மாவட்டம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.
மாநிலத்தில் இதுவரை 4.40 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 26 லட்சத்து 32,231 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 224 பேருக்கும், சென்னையில் 170 பேருக்கும், ஈரோட்டில் 151 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,517 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 80,686-ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,399 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 27 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,146-ஆக அதிகரித்துள்ளது.