பதக்க நாயகன் மாரியப்பனுக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அவரது சொந்த கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பதக்க நாயகன் மாரியப்பனுக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு


பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அவரது சொந்த கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016-இல் ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். இந்த முறை டோக்கியோவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது சாதனைக்கு மத்திய அமைச்சர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், தமிழக முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி பாராலிம்பிக் வீரர்களுடன் கலந்துரையாடலும் நிகழ்த்தினார்.

இந்த நிலையில், மாரியப்பன் தனது சொந்த கிராமமான பெரிய வடகம்பட்டிக்குத் திரும்பியபோது தீவட்டிபட்டி நான்கு சாலைப் பகுதியில் ஊர் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, சென்னை வந்தபோது விமான நிலையத்தில் தமிழக பாராலிம்பிக் சங்கம் சார்பில் மாரியப்பனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com