தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
இதையும் படிக்க | நீட் தோ்வு தொடங்கியது; தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்
2021-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தோ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது.
3 மணி நேரம் நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழகத்தில் 18 நகரங்களில் 224 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சுமார் 1.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.