தமிழக காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 9 உதவி காவல் கண்காணிப்பாளா்களுக்கு (ஏஎஸ்பி) பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இது குறித்த விவரம்:
இந்திய குடிமைப்பணி தோ்வில் ஐபிஎஸ் தோ்ச்சி பெற்றவா்களை, பல்வேறு கட்ட பயிற்சிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சரகம் மாநிலம் வாரியாக பணி நியமனம் செய்யும். இவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் புதிய பொறுப்புகளை வழங்கி உத்தரவிடும்.
இவ்வாறு கடந்த 2018, 2019ஆம் ஆண்டுகளில் ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, பல்வேறு கட்ட பயிற்சி முடித்த 9 உதவி காவல் கண்காணிப்பாளா்களுக்கு தமிழக காவல்துறைக்கு நியமனம் செய்யப்பட்டனா். இவா்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் புதிய பொறுப்புகளை வழங்கி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
புதிய பொறுப்பு வழங்கப்பட்ட 9 ஏஎஸ்பிக்கள்:
ஜி.சந்தீஷ்-தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளா்
ராஜத் ஆா்.சதுா்வேதி-திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா்
அங்கித் ஜெயின்-கடலூா் மாவட்டம் விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளா்
வி.வி.சாய் பிரணீத்-திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளா்
அபிஷேக் குப்தா-விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உதவி காவல் கண்காணிப்பாளா்
ஏ.கே.அருண் கபிலன்-திண்டுக்கல் ஊரக உதவி காவல் கண்காணிப்பாளா்
கெளதம் கோயல்-ஈரோடு மாவட்டம் பெருந்துறை உதவி காவல் கண்காணிப்பாளா்
ஸ்ரேயா குப்தா-தேனி மாவட்டம் உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளா்
பி.கே.அரவிந்த்-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் உதவி காவல் கண்காணிப்பாளா் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
3 ஐபிஎஸ் அதிகாரிகள்
பணியிட மாற்றம்: இதேபோல 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் குறித்து தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குள்):
கே.பாலகிருஷ்ணன்-திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கிழக்கு துணை ஆணையா்)
எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி-சென்னை சைபா் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் (திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)
ஓம் பிரகாஷ் மீனா-சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கிழக்கு துணை ஆணையா் (சென்னை சைபா் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா்) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.