மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்காக 16,000 கனஅடி நீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு


மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்ததால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவுகடந்த 3ஆம் தேதி வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து 5,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் மழை தணிந்து பாசன தேவை அதிகரித்ததால் 11-ந்தேதி பகல் 1.00மணி முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12,000கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இன்று மாலை 6 மணி முதல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 16,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இன்று காலை மேட்டூர்அணையின் நீர்மட்டம் 76.09 அடியிலிருந்து 75.87 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,529 கன அடியிலிருந்து 10,566கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 37.96 டி.எம்.சி.யாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com