கோயில் சொத்துகளை அபகரித்தால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தாக்கல் செய்யப்படவுள்ளார்.
கோயில் நிலத்தை அபகரித்தால் மீட்க மட்டுமே சட்டத்தில் வழிவகை இருந்த நிலையில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோத இன்று பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், பல முக்கிய மசோதாக்களை மாநில அரசு தாக்கல் செய்து வருகிறது.