தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் தேமுதிக 17ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக பலத்தை நிச்சயம் நிரூபிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.