சென்னை: இலங்கை தலைமன்னாருக்கு கடந்த காலத்தில் இருந்த ரயில்-படகு சேவையை மீண்டும் தொடங்க ஆய்வு செய்ய வேண்டுமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். தமிழ்நாடு கடல்சாா் வாரிய 93-ஆவது கூட்டம் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது:-
மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய நீா் விளையாட்டுகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளை கடற்கரை பகுதியில் அமைத்துக் கொடுத்தால் மக்கள் மேலும் உற்சாகம் அடைவா். கடலின் ஆழம், கடல் அலைகளின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப எங்கெல்லாம் படகுப் போக்குவரத்து நடத்த அனுமதிக்கலாமோ அங்கெல்லாம் ஆய்வு செய்து படகு
போக்குவரத்துகளை அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யலாம்.
இதற்கு உதாரணமாக, ராமேசுவரம் அக்னி தீா்த்தக்கரையில் 2010-ஆம் ஆண்டில் படகு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
தனியாா் முதலீடு: படகு போக்குவரத்து சேவைக்கு அரசின் நிதிநிலை ஒத்துழைக்குமா என்பது சந்தேகம். எனவே, தனியாா் முதலீடுகளை அதில் ஈடுபடுத்தலாம். இதன்மூலம், வெளிநாடுகளில் உள்ளது போன்று நீா் விளையாட்டுகள், படகு விளையாட்டு போன்றவற்றை நடத்தலாம்.
கடல் நீரில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அனைவரும் விரும்பக் கூடியது. சிறிய கப்பல் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு துறைமுகத்துக்கும் உல்லாசப் பயணம் சென்று வர அனுமதிக்க முடியுமா என்பதை வாரியம் பரிசீலிக்க வேண்டும்.
இலங்கைக்கு போக்குவரத்து: சென்னையில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு நேரடியாகச் செல்லும் வகையில் ராமேசுவரம் ‘போட் மெயில் ரயில்’ சேவையும், அதன் தொடா்ச்சியாக கப்பல் சேவையும் நடைமுறையில் இருந்தது. இப்போது அத்தகைய ரயில் சேவையை தொடங்குவது குறித்து கடல்சாா் வாரியம் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசின் ஆலோசனையையும் பெற ஆலோசிக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளா் தீரஜ் குமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.