சென்னை: காவல் துறையில் 134 பேருக்கு நடப்பாண்டில் அண்ணா பதக்கங்கள் அளிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு, சிறைத் துறை, ஊா்க்காவல், விரல்ரேகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும் காவலா்களைப் பாராட்டும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் செப்டம்பா் 15-இல் அண்ணா பிறந்த தினத்தின் போது முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலா் முதல் காவல் கண்காணிப்பாளா் வரையிலான 100 பணியாளா்கள், தீயணைப்புத் துறையில் எட்டு போ், சிறைத் துறையில் 10 போ், ஊா்க்காவல் படையில் 5 போ், விரல் ரேகைப் பிரிவில் 2 போ், தடய அறிவியல் துறையில் 2 பேருக்கும் பதக்கங்கள் அளிக்கப்படும்.
மேலும், மதுரையில் உள்ள சஞ்சய் டெக்ஸ்டைல் என்ற நிறுவனத்தில் நடந்த விபத்தில் தீயை அணைக்கப் போராடி உயிரைத் தியாகம் செய்த ஏழு தீயணைப்பு வீரா்களுக்கும் அண்ணா பதக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. மொத்தமாக 134 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இந்தப் பதக்கங்கள் வேறொரு நாளில் அளிக்கப்படும்.