பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: செப்.17 முதல் பெறலாம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் வெள்ளிக்கிழமை முதல் பெறலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னை: பிளஸ் 2 பொதுத் தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் வெள்ளிக்கிழமை முதல் பெறலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 2019- 2021-ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்ற பள்ளி மாணவா்களுக்கான, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தோ்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்.17-ஆம் தேதி முதல் மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள, பள்ளிக்கு வருகை தரும் மாணவா்கள், பெற்றோா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளியில் சமூக இடைவெளியினைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com