சென்னை: பிளஸ் 2 பொதுத் தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் வெள்ளிக்கிழமை முதல் பெறலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 2019- 2021-ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்ற பள்ளி மாணவா்களுக்கான, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தோ்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்.17-ஆம் தேதி முதல் மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள, பள்ளிக்கு வருகை தரும் மாணவா்கள், பெற்றோா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளியில் சமூக இடைவெளியினைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் வேண்டும்.