அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடனும் தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.