உள்ளாட்சித் தேர்தலில் மநீம தனித்துப் போட்டி: கமல்ஹாசன்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வியாழக்கிழமை அறிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வியாழக்கிழமை அறிவித்தார்.

வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்தன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுபற்றி கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com