ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வியாழக்கிழமை அறிவித்தார்.
வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையும் படிக்க | உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்துப் போட்டி
இதில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்தன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுபற்றி கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
"உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே."