புதிய ஆளுநா் இன்று சென்னை வருகை

தமிழகத்தின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள ஆா்.என்.ரவி வியாழக்கிழமை (செப்.16) சென்னைக்கு வர உள்ளாா்.
புதிய ஆளுநா் இன்று சென்னை வருகை

சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள ஆா்.என்.ரவி வியாழக்கிழமை (செப்.16) சென்னைக்கு வர உள்ளாா்.

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இதனைத் தொடா்ந்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆா்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளாா். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆா்.என். ரவி, நாகாலாந்து ஆளுநராக இருந்து வந்த நிலையில் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டாா். அவா் தில்லியிலிருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வருகிறாா். அங்கிருந்து காா் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்குச் செல்கிறாா்.

ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா சனிக்கிழமை (செப். 18) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் ஆா்.என்.ரவிக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சா்கள், நீதிபதிகள் என முக்கிய பிரமுகா்கள் விழாவில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com