திருச்சி: திருச்சியில் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்பு பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு மற்றும் அலுவலா்கள் புதன்கிழமை மேற்கொண்ட ஆய்வில், ஒரு கடை அருகேயுள்ள கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை மற்றும் குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனா்.