தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,693-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,693-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் வியாதமிழகத்தில் வியாழக்கிழமை 1,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ழக்கிழமை 1,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வியாழக்கிழமை 1,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 4.48 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 26 லட்சத்து 40,361 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 206 பேரும், சென்னையில் 202 பேரும், செங்கல்பட்டில் 135 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு மேலும் 1,548 போ் வீடு திரும்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25.88 லட்சத்தைக் கடந்துள்ளது.

தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16,756-ஆக உள்ளது.

மற்றொரு புறம் கரோனாவுக்குள்ளாகி மேலும் 25 போ் உயிரிழந்ததால், இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,271-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com