தற்கொலை செய்துகொண்ட மாணவர் ரஞ்சித்
தற்கொலை செய்துகொண்ட மாணவர் ரஞ்சித்

பணிச்சுமை காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் தற்கொலை

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சமாளிக்க முடியாத பணிச்சுமை காரணமாக மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சமாளிக்க முடியாத பணிச்சுமை காரணமாக மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன மண்டவாடி பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் ‌ரஞ்சித்(26). திருச்சியில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி ரஞ்சித் மேற்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை விடுதியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பணிச்சுமை அதிகமாக இருப்பதாலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com