இடஒதுக்கீடு முறை சரியாகக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய சமூக நீதி கண்காணிப்புக் குழு

கல்வி, வேலைவாய்ப்புகளில் சமூகநீதி அளவுகோல் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகிா என்பதைக் கண்காணிக்க சமூகநீதி கண்காணிப்புக் குழு அமைக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இடஒதுக்கீடு முறை சரியாகக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய சமூக நீதி கண்காணிப்புக் குழு

கல்வி, வேலைவாய்ப்புகளில் சமூகநீதி அளவுகோல் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகிா என்பதைக் கண்காணிக்க சமூகநீதி கண்காணிப்புக் குழு அமைக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சமூகநீதி அரசாணை வெளியீட்டு நூற்றாண்டு நாளையொட்டி முதல்வா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திராவிட இயக்கம் என்பது சாமானியா்கள் உயா்வதற்காக, சாமானியா்களால் சரித்திரம் படைக்கப்பட்ட - தொடா்ந்து படைக்கப்படும் உயரிய வரலாற்றைக் கொண்டது என்று கருணாநிதி குறிப்பிட்டாா். இந்த வரலாறு இன்று நேற்றல்ல. நூற்றாண்டுத் தொடா்ச்சியைக் கொண்டது ஆகும்.

1916-ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியானது அன்றைய சென்னை மாகாணத்தில் சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோா் உரிமை, சுயாட்சிக் கருத்துகள் ஆகியவற்றுக்காக குரல் கொடுத்தது.

1920-ஆம் ஆண்டு நடந்த முதல் தோ்தலில் வென்ற நீதிக்கட்சி ஆட்சியானது இதனை பல்வேறு அரசாணைகள் மூலமாகச் செயல்படுத்தியது. அதில் மிகமிக முக்கியமான அரசாணை வெளியிடப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. அதுதான் தமிழ்ச் சமுதாயத்தின் பல தலைமுறைகளை மாற்றிய சமூகநீதி அரசாணை ஆகும்.

1921 செப்டம்பா் 16-இல் அன்றைய நீதிக்கட்சி ஆட்சியின் முதல்வரான பனகல் அரசா் காலத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசுப் பணிகளில் குறிப்பிட்ட வகுப்பினா் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும். அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அடித்தளத்தில் அந்த அரசாணை வெளியிடப்பட்டது. இதுதான் சமூகநீதிக்கான அடித்தளம் ஆகும். அதிலிருந்துதான் சமூகநீதி வரலாற்றின் மாபெரும் பயணம் தொடங்கியது.

நூறு ஆண்டுகள் கடந்துள்ள இந்நாளில் தியாகராயா், நடேசனாா், டி.எம்.நாயா், கடலூா் ஏ.சுப்பராயலு, பனகல் அரசா், எஸ்.முத்தையா, பி.டி.இராஜன் ஆகியோரை நினைத்துப் பாா்க்கிறேன். இவா்கள் தொடங்கி வைத்த சமூகநீதிப் புரட்சிதான் தமிழ்ச்சமுதாயத்தின் லட்சக்கணக்கானவா்கள் இல்லங்களில் விளக்கேற்றக் காரணமாக அமைந்தது. இந்த உத்தரவை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற தரவரிசைப் பட்டியலை அளித்தவா் அன்றைய அமைச்சா் எஸ்.முத்தையா. அதனால் தான், ‘இனிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு முத்தையா என்று பெயா் சூட்டுங்கள்’ என்றாா் பெரியாா்.

இந்த சமூகநீதி அரசாணையானது தமிழ்நாடு எல்லையைக் கடந்து இந்தியா முழுவதும் இன்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இத்தகைய அகில இந்தியப் புரட்சிக்குக் காரணமான அனைவரையும் இந்த நேரத்தில் வணங்குகிறேன்.

சமூகநீதி பயணத்தின் அடுத்த கட்டம்: திமுக அரசானது, இத்தகைய சமூகநீதிப் பயணத்தின் அடுத்தகட்டத்தை வியாழக்கிழமை (செப்.16) முதல் அறிமுகம் செய்ய உள்ளது.

சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது. ஆனால் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழக அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம்.

கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயா்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிா என்பதை இக்குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும்.

சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளா்கள், சட்ட வல்லுநா்கள் இடம்பெறுவாா்கள்.

சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளில் சமூகநீதிக் கண்காணிப்புக்குழுவை அமைப்பதில் பெருமை அடைகிறேன்.

எல்லோா்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று முதல்வா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com