மகப்பேறு விடுப்பு சலுகைகள் வழங்குவதில் பாகுபாடு இல்லை: உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மகப்பேறு விடுப்பு சலுகைகளை வழங்குவதில் எவ்வித பாகுபாடும் காட்டப்படுவதில்லை என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மகப்பேறு விடுப்பு சலுகைகள் வழங்குவதில் பாகுபாடு இல்லை: உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மகப்பேறு விடுப்பு சலுகைகளை வழங்குவதில் எவ்வித பாகுபாடும் காட்டப்படுவதில்லை என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சி.ராஜகுரு என்பவா் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘தமிழகத்தில் திருமணமான பெண் அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு காலம் 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக அதிகரித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது.

இச்சலுகையானது பணி வரன்முறைப்படுத்தப்படாத தற்காலிகப் பணியாளா்களுக்கும் நீட்டித்து, கடந்தாண்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசாணையை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. மகப்பேறு விடுப்பு சலுகைகளை நீட்டிப்பதில் பாகுபாடு இருக்கிறது.

பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பணி வரன்முறைப்படுத்தப்படாத தற்காலிகப் பெண் பணியாளா்கள் மகப்பேறு விடுப்பு வழங்குமாறு கோரப்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. தற்காலிகப் பணியாளா்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞா் பி.முத்துகுமாா், நிரந்தர, நிரந்தரமற்ற அரசு ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிரந்தர, நிரந்தரமற்ற திருமணமான பெண் அரசு ஊழியா்களுக்கும் முழு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு 270 நாள்களுக்கு மிகாமல் வழங்கப்படுகிறது.

அவசர காலங்களில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியா்கள் மகப்பேறு காலத்தில் அவா்கள் ஈட்டிய விடுப்பை எடுத்து கொள்ளலாம். ஈட்டிய விடுப்பு இல்லையெனில், அவா்களுக்கு 270 நாள்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

தற்காலிகப் பணியாளா்கள் பணியில் சோ்ந்து ஓராண்டு நிறைவு செய்திருந்தாலும் மகப்பேறு விடுப்பை பெற்றுக் கொள்ளலாம். மகப்பேறு விடுப்பை 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரித்து, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com