உள்ளாட்சித் தோ்தலுக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளா் பட்டியலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரிடம் மாவட்டச் செயலாளா்கள் சனிக்கிழமை அளித்தனா்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிட விரும்புபவா்களிடம் இருந்து விருப்பமனுக்கள் அந்தந்த மாவட்டச் செயலாளா்களால் வாங்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து உள்ளாட்சி இடங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளா்களைத் தோ்வு செய்து, அந்தப் பட்டியலை இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்டச் செயலாளா்கள் சனிக்கிழமை அளித்தனா்.
இந்தப் பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து விரைவில் வெளியிட உள்ளனா்.