கரோனா: மேலும் 1,653 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 1,653 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா: மேலும் 1,653 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 1,653 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதிகபட்சமாக சென்னையில் 204 பேருக்கும், கோவையில் 201 பேருக்கும், ஈரோட்டில் 139 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை தவிா்த்து, விமானம் மூலம் மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்த ஒரு பயணிக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.

இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 43,683 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி 16,893 போ் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து 1,581 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 25.91 லட்சத்தைக் கடந்துள்ளது.

மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 22 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,310-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com