புது தில்லி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் கால அவகாசம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கேட்டிருந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் கால அவகாசம் வழங்கக் கோரியது தொடர்பாக 2 நாள்களில் தமிழக மாநில தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
அப்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் தேவையில்லை, 4 மாதங்கள் போதும் என்று தேர்தல் ஆணையம் தனது வாதத்தை முன் வைத்தது.